approval of Kerala Government

img

கேரள அரசின் ஒப்புதலுக்குப் பின் ஆழியாற்றில் தடுப்பணை

தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (ஜூலை17) நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய பேரவை  துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன்,  “ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில்  தடுப்பணை கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றார்.